எப்படியெல்லாம் ஒரு பேய்படம் இருக்கணுமோ அப்படியெல்லாம் இருக்கிறது. Same time எப்படியெல்லாம் ஒரு பேய் படத்தை எடுக்கக் கூடாதோ அப்படியெல்லாம் எடுத்து வைத்திருக்கிறார்கள்
கதை?
இருட்டினால் ஆண்கள் வெளிவராத ஊர், ஆண்களை மட்டும் கொல்லும் பேய், பேய்க்கு ஒரு ப்ளாஸ்பேக், ஏ படம் எடுக்கத் துடிக்கும் இயக்குநர், அவருக்கும் பேய்க்குமான கனெக்ஷன் என கதை கன்னாபின்னா ரகம். திரைக்கதை? “அதோ அந்தா தெரிது பார்” என்றளவில் மிக தூரமாக இருக்கிறது
சதிஷ் தன்னை ஹீரோ என்று நம்புவதை கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர் இன்னும் தன்னை காமெடியன் என நம்புவது தான் வேதனை. சன்னிலியோன் படங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் ஊக்கப்பட்ட இளைஞர்களுக்கு அம்மணியின் தமிழ்த்திரை வரவு ஆர்வத்தைத் தந்தாலும் படத்தில் அவரின் பங்களிப்பு “பெரிதாக” ஒன்றுமில்லை. ரமேஷ் திலக், ஒரே காட்சியில் வரும் ஜிபி.முத்து என எல்லோரும் ஜஸ்ட்லைக் தட் கேரக்டர்ஸ் தான்
பல்லைக்காட்டும் CG, ஓரளவு ஓகேவான ஒளிப்பதிவு, பின்னணி இசை என டெக்னிக்கலாகவும் படம் பெரிதாக சாதிக்கவில்லை.
இன்று பேய்படங்களைப் பார்க்கும் ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான கதைப்பின்னணி தேவைப்படுகிறது. அல்லது மிகவும் அசாத்தியமான திரைக்கதை தேவைப்படுகிறது. இல்லை என்றால் நாம் பயம் காட்டுவதைப் பார்த்து அவர்கள் பரிதாபப்படுவார்கள்.
பாவம் இந்த கோஸ்ட்
2/5
-மு.ஜெகன் கவிராஜ்