‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படங்களின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் கொள்ளை கொண்ட நாயகி ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டாவின் படங்களில் தொடர்ச்சியாக நடித்ததால் அவருடன் காதல் போன்ற கிசுகிசுக்களில் சிக்கிய போதும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை ராஷ்மிகா மந்தனா. தற்போது அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் “இனி வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களிலும் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும், இதனால் வித்தியாசமான கதையம்சம்
கொண்ட கதைகளை வைத்திருக்கும் இளம் இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தங்களிடம் இருக்கும் கதைகளை தனது இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும், அக்கதைகளை தன்னிடம் இருக்கும் குழுவினருடன் ஆராய்ந்து எந்தக் கதையில் நடிப்பது என்பதை முடிவு செய்து தான் அந்த இயக்குநரையோ அல்லது எழுத்தாளரையோ மேற்கொண்டு பேச்சு வார்த்தைக்கு அழைப்பேன்” என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் இந்த தொடர்பு வழிக்காக rashmikareads@gmail.com என்கின்ற தனது இமெயில் முகவரியையும் அறிவித்துள்ளார். வழக்கமான ஹீரோயினாக இவரை பலரும் எண்ணி வந்த போது, மந்தனாவின் இந்த அறிவிப்பு, இவருக்குள் இப்படி ஒரு தேடலா..? என்று பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.