Tamil Movie Ads News and Videos Portal

”காளிங்கராயன்” வேடத்தில் நடிகர் கார்த்தி

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிகள் பசுமையாக இருப்பதற்கு பவானி ஆறு எப்படி ஒரு காரணமோ அதே போல் காளிங்கராயன் கால்வாயும் ஒரு முக்கியக் காரணம் ஆகும். காளிங்கராயன் என்பவர் வீரபாண்டியன் ஆட்சி காலத்தில் கோவைப் பகுதியின் விவசாயத்தை செழிக்கச் செய்வதற்காக கால்வாய் வெட்டும் ஆலோசனை வழங்கியதோடு அதை முன்னின்று செயல்படுத்திய தலைமை அமைச்சரும் ஆவார்.

 

அவரின் பெயரிலே தான் அந்த கால்வாயை மக்கள் அழைக்கின்றனர். கொங்குமண்டலப் பகுதியைச் சேர்ந்தவரான நடிகர் கார்த்தி கடந்த பொங்கல் அன்று காளிங்கராயன் வாய்க்காலில் குடும்பத்தோடு முளைப்பாரி எடுத்ததோடு, விவசாயம், நீர்நிலைகள் பாதுகாப்புக் குறித்துப் பேசிய வீடியோ வைரலானது. இதனையடுத்து நடிகர் கார்த்தி வீரதீரமிக்க காளிங்கராயர் வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என்கின்ற தகவலும் பரவி வருகிறது.