விஜய் சேதுபதிக்கு வில்லன் ஆன இயக்குநர்
அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய திரைப்படம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”. இப்படத்தில் விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு வில்லனாக இயக்குநரும் பிரபல நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனுமான மோகன் ராஜா நடிக்கவிருக்கிறார் என்கின்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ‘தனி ஒருவன்’ படத்தின் வெற்றிக்குப் பின்னர் அவரின் இயக்கத்தில் படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. வில்லன் வேடத்தில் நடிப்பது தொடர்பாக மோகன் ராஜா கூறும் போது, “இந்த கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாகவும், மனதுக்குப் பிடித்ததாகவும் இருந்ததால் நடிக்க சம்மதித்தேன். ஆனால் அது என்ன கதாபாத்திரம் என்பதை கூறமாட்டான்.” என்று தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே 2014ம் ஆண்டு ‘என்ன சப்தம் இந்த நேரம்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.