தமிழின் முன்னணி நட்சத்திரங்களாகத் திகழும் விஜய், அஜீத், சூர்யா, கார்த்தி, விக்ரம், தனுஷ் ஆகியோருக்கு எப்படி தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறதோ, அதே போன்று அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உண்டு. அதிலும் குறிப்பாக நடிகர் விஜய்க்கு மலையாள உலகில் விஷேச வரவேற்பு உண்டு. அவரின் படங்கள் வெளியாவதற்கு முன்னர் அதற்கு கொடுக்கப்படும் விளம்பரங்களே அதை தெளிவாக உணர்த்தும். அது
முற்றிலும் பொய்யில்லை என்பதை தற்போது வெளியான ‘பிகில்’ படத்தின் வசூல் நிலவரமும் உணர்த்தியிருக்கிறது. பிகில் படம் வெளியான முதல்நாளில் கேரளாவில் வசூலித்த தொகை ருபாய் 5 கோடியாம். இது மலையாள உலகின் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோரின் படங்களுக்கே கிடைக்காத வரவேற்பாம். மேலும் ஒட்டுமொத்தமாக பிகில் கேரளாவில் மட்டும் 19,6 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக கார்த்தி நடித்த கைதி 9 கோடி வசூலித்திருக்கிறது. இதன் மூலம் மலையாள உலகிலும் விஜய் வசூலில் நம்பர் 1 என்பதை பிகில் உலகிற்கு உரத்து உரைத்திருக்கிறது.