தமிழில் உருவாகும் முதல் வேற்றுகிரகவாசிகளின் படம் என்கின்ற பெருமையினை சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’ திரைப்படம் பெற்றிருக்கிறது. இப்படத்தில் முதன்முறையாக மூன்று வேடங்களில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
யோகிபாபு, கருணாகரன், இஷா கோபிகர், பால சரவணன் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தொடங்கி இருப்பதால், படுவேகமாக நடைபெற்று வருகிறதாம். இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பு அதன் இறுதிகட்டத்தை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகுவதால் படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.