உலகெங்கும் கொரோனா வைரஸ் கோரத் தாண்டம் ஆடிக் கொண்டிருக்கும் இந்த அசாதாரணமான சூழலில் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள் என பலரும் தங்களால் முடிந்த உதவியை மத்திய மற்றும் மாநில அரசுக்கு அளித்து வருகின்றனர். இந்த வரிசையில் தெலுங்கு திரைப்பட நடிகர்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்களது நிவாரணத் தொகையினை அரசுக்கு அளித்து வருகின்றனர்.
மகேஷ்பாபு மற்றும் சிரஞ்சீவி முறையே தலா 1 கோடியினை நிவாரண நிதியாக வழங்கி இருக்கும் சூழலில் ‘பாகுபலி பிரம்மாண்ட நாயகன் பிரபாஸ்’ தலா 4 கோடி ரூபாயை நிவாரண நிதியாக வழங்கி தான் பிறருக்கு உதவுவதிலும் பிரம்மாண்டமானவன் என்று நிருபித்துள்ளார். மத்திய அரசுக்கு 3 கோடி ரூபாயும், ஆந்திர மற்றும் தெலுங்கானாவிற்கு தலா 50 இலட்சம் ரூபாயும் வழங்கியுள்ளார் பிரபாஸ்.