Tamil Movie Ads News and Videos Portal

பந்தயம் -ஒரு புத்தகம்/ ஒரு பார்வை

சுஜாதா எழுதிய சிறுகதை எழுதுவது எப்படி? என்ற ஒரு சிறுகதை தொகுப்பு உண்டு. அது சிறுகதை எழுத சொல்லித் தர்ற புக் இல்ல. ஆனா அதுல “சிறுகதை இப்படி இருந்தா நல்லாருக்கும்டா”னு சொல்ற மாதிரி சில கதைகள் உண்டு. தலைவனோட கதைகள்ல பெரும்பாலும் ஒரு புள்ளி கூட தேவையில்லாம இருக்காது. ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் ஆண்டன் செகாவ் சிறுகதைகள் பற்றி எழுத்தாளர் எஸ்.ரா பேசும்போது கள்ளு குடிச்சிட்டு உழைச்சி களைச்ச பனையேறி தென்னஒலையை விரிச்சி சொகமா படுத்துக் கிடக்க மாதிரி, நானும் சொகமா கேட்டேன். நிகழ்ச்சி முடிஞ்சி வெளில வந்த உடனே நண்பர் தினேஷ்ராம்ட ஆண்டன் செகாவ் புக் கேட்டேன். கேட்டு மூனு மாசம் கடந்தாலும் வாங்கி கொடுத்துட்டாப்ல. நேத்து தான் வாசிச்சி முடிச்சேன்.

“ஒரு பெரிய சம்பவத்தை வெறும் ஒரு பத்திக்குள்ள கொண்டு வாரதுலாம் அசாத்தியம். பந்தயம் கதையில பந்தயம் கட்டுறவருக்கு கிடைக்கிற தத்துவ தரிசனம்லாம் மாஸு.

முக்கியமா ஒரு கேரக்டரோட குணாதியசத்தை ரெண்டே வரில நச்சுன்னு சொல்றது வெறித்தனம். எங்க ஊர்ல ஒரு தாத்தா ஒருத்தன் கேரக்டரை இப்படி சொல்வாரு,

“பய கெட்டிக்காரன் தான். அன்னாடம் வேலைக்குலாம் பேய்ருவான். செரிக்கிவுள்ளைட்ட ஒரு கெட்டப்பழக்கம் மட்டும் உண்டு..இந்த கண்ணு முழிக்காத நாய்குட்டிவளைக் கண்டா மட்டும் தூக்கிட்டுப் போயி ப்ளேடை வச்சி அறுத்துப்போட்ருவான்”ம்பாரு. நமக்கு படக்குங்கும். ஆண்டன் செகாவும் சில படக்குகளை கொடுப்பாரு.