எதிர்ல இருக்கவனுக்கு கோப்பையில நிறைச்சு கொடுத்துட்டு, “தம்பி கேப்பையில நெய் வடிஞ்சிது.. அதை நான் ஆப்பையில பிடிச்சிருக்கேன்”ன்னுசொன்னா… தம்பியும், “நீ யார்ணே நீ சொன்னா கரெக்டா தாம்ணே இருக்கும்” பான். உடனே ஊத்திக் கொடுத்த அண்ணனுக்கு , “OK இதே போல ஒட்டுமொத்த மக்களும் நம்பிட்டா நமக்கு நல்லது தானே”ன்னு ஒரு முடிவை எடுக்க தோணும்ல.. கிரகம் தோணிட்டு
ஊட்டி மாதிரி இருக்குற ஒரு ஊர்ல போயி, அண்ணந் தம்பியா இருக்குற மூணுபேர்டையும், ” உங்க கடையோட நேம்போர்ட் ரொம்ப நாளா அழுக்காகிக் கிடக்கு..நான் புதுசாக்குறேன்னு சொல்லி, அவங்க நடத்திட்டு வந்த காபி கடை பக்கத்துலே ஒரு காதல் கடையைப் போடுவோம். இப்ப பாருங்க காபி வித் காதல்னு கூட்டம் கும்மும்னு அண்ணன் ஐடியாச் சொல்ல…, “காலியாக் கிடக்க காபி கடையில இந்தக் காதல் கடையால ரெண்டு வடை வித்தாலும் நல்லதுதானன்னு மூனு அண்ணந்தம்பிகளும் முழுசா நம்பி OK okண்ணேன்னாங்க
காபி கடையில கொஞ்ச நேரம் ஜாலியா இருங்க..காதல் கடையில கொஞ்சம் எமோஷ்னலா, க்ளாமரா, ரொமான்ஸா இருங்கன்னு சொல்லி, அங்க ஒரு மூனு செவத்தப் பிள்ளைங்களையும் வச்சிருந்தாரு அண்ணன். இவிய்ங்க மூனுபேரு, அவங்க மூனுபேரு ஆக ஆறாச்சி. இன்னொரு ஒன்றரை ஆளச் சேத்தா கலகலப்பா இருக்குமேன்னு ஒன்றரை ஆளை உள்ள கொண்டு வர, ஆக ஏழரை ஆச்சு? அப்புறம் என்ன?
அண்ணந்தம்பி மூனுபேர்ல ஒருத்தர் Married person. மற்ற ரெண்டுபேர்ல ஒருத்தர் லவ்வர் பாய். அவருக்கு மூத்தவரான ஒருத்தர் பெயலியர் பாய்.
பெயலியர் பாய் தன் லிவிங் லவ் பெயலியரான சோகத்துல இருக்க, லவ்வர் பாய்க்கு கல்யாணம் நிச்சயமாகுற சூழல் வருது. அண்ணன் இருக்கும் போது தம்பிக்கு கல்யாணம் நடந்தா நல்லாருக்காதுன்ற 1980-ஆம் ஆண்டு சிந்தனைப்படி, பெயலியர் அண்ணனுக்கும் சூட்டோடச் சூட்டா ஒரு சூடா இருக்குற பொண்ண நிச்சயம் பண்றாங்க..கொடுமை என்னன்னா அந்தச் சூடு பொண்ணு, ஆல்ரெடி கல்யாணம் முடிஞ்ச பெரிய அண்ணன் கூட ஒன்நைட் ஸ்டாண்ட் ஆடியிருக்கும்..அய்யய்யோ நாம விளையாடிய பொண்ணுகூடவா தம்பிக்கு மேரேஜ்னு அண்ணன் இதைத் தடுக்க ட்ரைப்பண்ணுவாரு. இன்னொரு பக்கம் அந்த லவ்வர் பாய்க்கு நிச்சயமான பொண்ணுக்கு, நிச்சயமான லவ்வர் பாயைவிட, பெயலியர் பாய்மேல லவ் அதிகமாய்டும்..பெயலியர் பாய்க்கும் தான். இதுபோதாதுன்னு லவ்வர் பாய்க்கு தான் முன்னாடி ஒண்ணுமண்ணாயிருந்த தோழி மேல லவ்வாயிரும்..
ஆங்…பாரேன்.. பெறவு?
பெறவென்ன பெறவு.இது ஆணாதிக்க உலகமில்லியா? ஒன் நைட் ஸ்டேண்ட் பொண்ணை தொந்தரவு பண்ணி துரத்தி விட்றாங்க..லவ்வர் பாயோட ப்ரண்டை கன்வின்ஸ் பண்றாங்க..நிச்சயமான பொண்ணு கூட பெயலியர் பாயை கோர்த்து விடுறாங்க.. (இதுக்கு முன்னாடி.பெயலியர் பாய் கூட லிவிங்ல இருந்த பொண்ணு அவரோட முன்னால் க்ரஸ்கூட லிங் ஆகி போய்ருப்பாங்க..பெறவு திரும்பவும் வந்து, நம்ம பெயலியர் பாயிட்ட, “என் வயித்துல பூச்சி கிடக்கு..நீதான் ரீசன்பாங்க…”அப்ப அந்தக் க்ரஸ் இவளை என்னதான் பண்ணான்?” அப்படின்னு பெயலியர் பாய் யோசிக்கும் முன்னே நாம யோசிக்க..நல்ல நேரம் யோசிச்சு முடிக்குமுன்னே அந்த லிவிங் நாயகி தன் பழைய க்ரஸ்கூடவே போயிருவாங்க)
லாஸ்ட்ல அத்த காரணம் சொத்த காரணும்னு குழம்பி அண்ணந்தம்பிங்க மூனுபேரும் நினைச்ச மாதிரியே எல்லாம் முடிஞ்சிரும். சரி அந்த ஒன்நைட் ஸ்டாண்ட் பொண்ணு பண்ணது தப்புன்னா கல்யாணம் முடிச்ச அண்ணன் பண்ணது என்னது?
அப்புறம் இதுல வார எல்லாப் பொண்ணுங்களும், “அண்ணந்தம்பிங்க என்ன சொன்னாலும் செய்றாங்க…வான்னா வர்றாங்க..ச்சீ போன்னா போறாங்க..” இதையெல்லாம் பார்த்துட்டிருந்த நமக்கு பல கேள்வியும் குழப்பமும் மண்டையக் குடைய ஆரம்பிச்சது, குடைச்சல் அதிகமாகி ரத்தம்லாம் சூடாயிட்டு, சூடான ரத்தம் இதய இயக்கத்தை எதோ பண்ணிடுமோன்னு கதற ஆரம்பிக்க.. டக்னு சுபம்னு சொல்லி ரம் பம் பம் ஆரம்பம்னு இளையராஜா பாட்டைப் போட்டுட்டாங்க..
ராசாவோட ஒத்தப்பாட்டு போகவிருந்த மொத்த உசுரையும் காப்பாத்திட்டு🙏🙏
1.5/5
-மு.ஜெகன் கவிராஜ்