நேற்று (01.10.2021)மாலை ருத்ர தாண்டவம் படம் பார்த்துட்டு இரவில் இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தது தற்செயல் நிகழ்வுதான்…
“வாழிடம் தான் சிந்தனையை தீர்மானிக்கிறது” என்கிறார் மார்க்ஸ்..
நாம் எங்கே வாழவேண்டும், எப்படி வாழ வேண்டும் என்று தீர்மானிக்கும் சக்தி நம்மிடம் இல்லாத சூழலை உருவாக்கி வருகிறது மேல்தட்டு.
இந்நிலையில் ருத்ர தாண்டவம் படம் வன்கொடுமை சட்டப்பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறது…இந்தப்புத்தகம் பட்டியல் வகுப்பினர்க்கு சிறிய கேடயமாக இருக்கும் வன்கொடுமை சட்டத்தை நீக்க பெரும் முயற்சி எடுக்கிறார்கள். அவற்றை நீர்த்துப் போகச் செய்யும் தலித் சினிமாக்கள் அவசியம் என்ற கருத்தை முன் வைக்கிறது..
மனிதர்களில் பிரிவுகள் இருக்கலாம் சினிமாவில் எந்தப்பிரிவும் கிடையாது…எல்லாமே கலை என்ற ஒரே பிரிவுதான் என்ற கருத்தில் எனக்கும் உடன் பாடு உண்டு. ஆனாலும் தலித் சினிமாக்கள் என்ற வகை ஓர் அவசியத்தைப் பேச வேண்டிய இருக்கிறது என்கிறது நூல். இதுவரை வந்த தலித் சினிமாக்கள் பற்றிய அலசல் நன்றாகவே இருந்தது…
தன் தரப்பு நியாயத்தை விட பிறர் தரப்பை குற்றம் சாட்டுதலிலே புத்தகம் குறியாக இருக்கிறது என்பது தான் சின்னகுறை.