மணிரத்னம் தயாரிப்பில் வானம் கொட்டட்டும் என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விக்ரம்பிரபு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்கள். மிக முக்கியமான கேரக்டரில் சரத்குமார் நடித்துள்ளார். படம் குறித்து சரத்குமார் பேசும்போது,
“இயக்குநர் தனா இப்படத்தின் கதையை கூறியதும் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் இயல்பான கதையாக தோன்றியது. இப்படம் அன்றாட மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக கூறும் குடும்பத்துடன் பார்த்து மகிழும் படமாக இருக்கும். இதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா? என்று நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் நடிப்பது மகிழ்ச்சி” என்றார்.