கொரோனா என்னும் இந்த தொற்று நுண்ணுயிரி வைரஸ அழிப்பதில் உலகின் ஒவ்வொரு நாடும் பல பகீரத முயற்சிகளை எடுத்து வருகின்றன. அவை கொரோனா பரவலைத் தடுக்க, அழிக்க எடுத்து வரும் முயற்சிகளின் அடிப்படையில் அந்தந்த நாடுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கியிருக்கிறது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வு. இந்த ஆய்வில் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், மால்கள், திரையரங்குகள் போன்றவற்றை மூடுதல், போக்குவரத்தை தடை செய்தல், சுகாதாரத்துறையில் முதலீடு, வைரஸை கண்டறியும் அறிவியல் முயற்சிகள், பொதுநிகழ்ச்சிகளை ரத்து செய்தல், மக்களிடையே வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை பரப்புதல்,
பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய பரிசோதனைகள் நடத்துதல், வைரஸ் தொற்று பரவிய வழித்தடத்தை கண்டறிதல் என்று 13 அம்சங்களை உள்ளடக்கிய தகவல்களின் அடிப்படையில் நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் செயல்பாடுகளுக்கு 100க்கு 100 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் போல், மொரீஸீயல், நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளும் இதில் 100 மதிப்பெண்கள் பெற்று உள்ளன. அமெரிக்கா இதில் 70 புள்ளிகளை மட்டுமே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.